ஜூலை.2ல் கலைஞர் கனவு இல்ல திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள  193 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூலை 2 அன்று “கலைஞரின் கனவு இல்ல திட்ட” சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-30 03:10 GMT

ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்

நாகை மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டம்ம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,   நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள  193 கிராம ஊராட்சிகளிலும் 02.07.2024 அன்று “கலைஞரின் கனவு இல்ல திட்ட” சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெறவுள்ளது.  இக்கிராம சபா கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளை தேர்வு செய்தல்  மற்றும் ஊரக குடியிருப்பு பழுது நீக்க பயனாளிகளை தேர்வு செய்தல் தொடர்பான சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெறும். இக்கிராம சபா கூட்டத்தில்  அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள,; ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News