குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி திருவீதி உலா நடந்தது.

Update: 2024-05-23 07:04 GMT

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி, தர்மபுரி நகராட்சிக்கு குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்ககவச அலங்கார சேவையும், மகா தீபாராகார ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து மாலை சந்திர பிரபை வாகனத்தில் சாமி திருவீதிஉலா நடைபெற்றது.விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News