நெடுஞ்சாலை  விரிவாக்க பணி விரைந்து முடிக்க  கோரிக்கை

காங்கேயம் அடுத்த படியூர் முதல் ஊத்துக்குளி வரை உள்ள நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-04 01:46 GMT

காங்கேயம் அடுத்த படியூர் முதல் ஊத்துக்குளி வரை உள்ள நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


படியூர் சோதனை சாவடியில் இருந்து ஊத்துக்குளி வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்வதாக நெடுஞ்சாலை துறையின் சார்பில் அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. பின்னர் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் இந்த சாலையில் பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இருவழி நெடுஞ்சாலை படியூர் இருந்து ஊத்துக்குளி ஆர்.எஸ், ஊத்துக்குளி வழியாக செங்கப்பள்ளி வரை செல்கிறது.

 எனவே தினசரி அளவில் அதிகப்படியான இருசக்கர வாகனங்கள், கார்‌, பேருந்து,லாரி மற்றும் கனரக வாகனங்கள் என போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த இருவழிச் சாலை போதுமானதாக இல்லை எனவும், இதனால் அவ்வபோது வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருவதாகவும், உடனடியாக அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News