வேட்டவலம் மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

வேட்டவலம் மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43 வது விளையாட்டு விழா நடந்தது.

Update: 2024-02-16 05:02 GMT


வேட்டவலம் மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43 வது விளையாட்டு விழா நடந்தது.


திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43 வது விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், பள்ளி தலைவர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையேற்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்தனர்.

பள்ளியின் தாளாளர் சிவசங்கரி மாணிக்கம், பள்ளி நிர்வாக அலுவலர் மாணிக்கம், பள்ளி முதல்வர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தார். அனைவ ரையும் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேட்டவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கினார். இதில் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர், முடிவில் ஆசிரியர் சேவியர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News