வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் கனுபிடி உற்சவம்

பாதூர் ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் கனுபிடி உற்சவம் நடந்தது.

Update: 2024-01-17 04:22 GMT

உற்சவம் 

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் கனுபிடி உற்சவம் நடந்தது. அதனையொட்டி மார்கழி மாதம் முதல் தேதி முதல் இன்று வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்து ஸ்ரீ ஆண்டாள் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. இறுதி நாளான இன்று ஆண்டாள் சுவாமி சின்ன ஏரியில் கனுபிடி நடந்தது. பின்னர் காலை 5 மணியளவில் இருந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் தீபாரதனை வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தோளுக்கினியன் புறப்பாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன் ஐயர், சம்பத் ஐயர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News