ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

சங்கு பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

Update: 2024-05-28 05:47 GMT

பெரம்பலூர் சங்கு பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.  பெரம்பலூர் நகர் சங்கு பகுதியில் உள்ள கடமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த மே 19ஆம் தேதி பூச்சி தேர்தல் விழாவுடன் தொடங்கி நடைபெற்றது.

இதனை அடுத்து மே 21 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து விழாவின், மே 27 ஆம் தேதி மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பல விஷயங்கள் செய்தனர் அதனை தொடர்ந்து தீச்சட்டி ஏந்தி அழகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News