ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

அரியலூர் அருகே அண்ணா நகர் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.

Update: 2024-01-25 00:33 GMT


அரியலூர் அருகே அண்ணா நகர் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.


அரியலூர் அருகே அண்ணா நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் அமைய பெற்றுள்ளது ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயம் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. இதில் சுப்ரபாதம், கோபூஜை, இரண்டாம் கால கோமங்கள், யாத்ரா தானம் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது. பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

பின்னர் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதணை நடைப்பெற்றது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதில் அப்பகுதி முக்கியதஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News