ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருவீதி உலா

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-17 01:08 GMT

ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருவீதி உலா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா இரண்டாம் திருநாள் பட்டமங்கலம் தெற்கு தெரு சுள்ளங்குடி கிராமத்தார்கள் மண்டகப்படியை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கோவில் நரசிம்மர் மண்டபத்தில் உற்சவர் சௌமியநாராயணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு துளசியால் அர்ச்சனை செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மங்கல வாத்தியங்களுடன் திருவீதி புறப்பாடு துவங்கியது. வான வெடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிம்ம வாகனத்தில் பவனி வந்த சௌமிய நாராயணப் பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News