சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 

சீனிவாசப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் கரிக்கோலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-21 04:42 GMT

கரிக்கோலம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், சீனிவாசப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் கரிக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை 10:00 மணிக்கு, கலசப் புறப்பாடும், 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. இதையடுத்து, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில், உள்ளாவூர் ஊராட்சி தலைவர் உஷா உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News