ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசி பகல் பத்து ஆறாம் நாள்

Update: 2023-12-18 05:16 GMT

நம்பெருமாள் உற்சவம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

  பகல் பத்து ஆறாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உற்சவர் நம்பெருமாள் தொப்பாரக் கொண்டை, மார்பில் மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம் முத்துச்சரம் மற்றும் நெல்லிக்காய்மாலை, புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிமூலஸ்தானத்தில் இருந்து தங்கபல்லக்கில் ஆழ்வார்கள் புடைசூழ பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9. 45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து வைபவத்தின் 10 ஆம் நாள் வரும் டிசம்பர் 22-ம் தேதி மோகினி அலங்காரத்தில்நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் ஜனவரி 23-ம் தேதி அதிகாலை 4- மணிக்கு பரமபதவாசல் திறப்பு எனப்படும். சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 4.00 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.

Tags:    

Similar News