புதுக்கோட்டை அருகே மாநில கூடைப்பந்து போட்டி

புதுக்கோட்டை அருகே மாநில கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2023-12-31 11:54 GMT

பரிசு பெற்ற மாணவிகள்

புதுக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோயம்புத்தூர் A அணியினர் சென்னை A அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றனர்.

தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கூடை பந்தாட்ட கழகம் இணைந்து நடத்திய 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கூடை பந்து போட்டி புதுக்கோட்டை அருகே தனியார் கலை கல்லூரியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 38 மாவட்டத்தில் இருந்து 41 அணியினர் பங்கு பெற்றனர். இந்த போட்டியானது கடந்த 26 ஆம் தேதி அன்று தொடங்கி 5 நாள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று இரவு இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த இறுதி போட்டியில் கோயம்புத்தூர் ஏ அணியினரும் சென்னை ஏ அணியினரும் போட்டியிட்டனர் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இருவரும் சமமான புள்ளியில் வந்த நிலையில் கோயமுத்தூர் அணியினர் மின்னல் வேகத்தில் புள்ளிகளை எடுக்க துவங்கினர். இறுதியில் கோயமுத்தூர் அணியினர் 91-78 சென்னை அணியினை 13 புள்ளிகள் வித்தியாசத்தில் கோயமுத்தூர் ஏ அணியினர் வெற்றி பெற்றனர்.

சென்னை ஏ அணியினர் இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியினை ஏராளமான விளையாட்டு வீராங்கனைகள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News