மாநில அளவிலான பூப்பந்து போட்டி

சேலத்தில் மாநில அளவிலான பூப்பந்து போட்டி எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி தொடங்கி வைத்தார்

Update: 2023-12-24 05:01 GMT

மாநில அளவிலான பூப்பந்து போட்டி

தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், சேலம் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் மற்றும் எம்.டி.எம் பூப்பந்தாட்டம் இணைந்து 38 மாவட்டங்களுக்கு இடையே சீனியர் மாநில பூப்பந்து போட்டி இன்று காலை சி.எஸ்.ஐ பாலிடெக்னிக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டியை மாநில தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் பூப்பந்து செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். எழிலரசன் பார்த்திபன், சீனிவாசன், சிவரஞ்சன், அலெக்ஸ் பிரபு, கீதாகென்னடி செல்வகீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News