மாநில அளவிலான கபாடி போட்டி: அரசு பள்ளி மாணவியர் சாதனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கபாடிப் போட்டியில் 2-ம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

Update: 2023-11-16 09:57 GMT

சாதனை படைத்த மாணவியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

2023-24-ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான 39-வது பாரதியார் தின விழா குழுப் போட்டிகள் கோவை அரசூர் கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 19- வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கான கபாடி போட்டிக்கு வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவியர் அணி கலந்துகொண்டு விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றிபெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற இம்மாணவியர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியை து.பேபி லதா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் போட்டியில் பங்கேற்ற மாணவியர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை மாணவியர்களுக்கு வழங்கி பாராட்டினர். பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் ச.சாந்தி, வே. செல்வாம்பாள், உடற்கல்வி ஆசிரியர்கள் மா.லதா, செ.ஜெயசீலி, விளையாட்டு ஆசிரியர் ம.குமாரசாமி உள்ளிட்ட உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டிப் பேசினர். உடற்கல்வி ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

Tags:    

Similar News