திருவண்ணாமலையில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது .
By : King 24X7 News (B)
Update: 2024-03-28 14:21 GMT
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் எஸ். ரகோத்தமன் கலந்து கொண்டு பணத்தையும், நேரத்தையும் எப்படி கையாளுவது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.
இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.