மேட்டூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சேலம் மாவட்டம்,மேட்டூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-01-09 10:58 GMT

சேலம் மாவட்டம்,மேட்டூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

மேட்டூர் பேருந்து நிலையம் எதிரே அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சேலம் மண்டல செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ,காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது உறுதி ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட 6- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News