எஸ்டிபிஐ நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

Update: 2023-12-25 06:20 GMT

எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகம் மேலப்பாளையத்தில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் இன்று நடைபெற்றது‌. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஏ.கனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா கலந்து கொண்டார், கூட்டத்தில் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாபெரும் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஜனவரி 7 மதுரையில் நடைபெறுகிறது. இதில் திரளாக பொதுமக்களை பங்கேற்க வைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் உருகுழைந்த மேலப்பாளையம் டவுண் பகுதியை இன்றைக்கும் கருப்பன் துறை மேலநத்தம் தாம்போதிக்கு உயர்மட்ட பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி அணைத்து இடங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் காய்ச்சல், இருமல், தோல் நோய், சேற்றுப்புண், தொண்டை வலி அலர்ஜி, போன்ற நோய்களால் மக்கள் பரிதவித்து வருகின்றனர் மழை காரணமாக பெரும்பாலான மக்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது அதனால் பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும், நிவாரண உதவிக்காக வரும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News