கோதுமை தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ மனு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் கோதுமை தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 09:26 GMT
மனு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 11) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் தாழையூத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.அதில் தாழையூத்து பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் கடந்த ஆறு மாதங்களாக கோதுமை தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.