புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம், ஆணைக்குன்னம் பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-19 16:39 GMT

புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே ஆணைக்குன்னம் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ரேஷன் கடையை, 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டடத்தின் சில பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுகின்றன. எனவே, பழைய ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே பகுதியில் புதிதாக கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News