அரசு பேருந்து மீது கல்வீச்சு - வாலிபர் கைது

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில்அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-05 02:40 GMT

காவல் நிலையம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் உட்கோட்டத்துக்குட்பட்ட அரசு பேருந்து சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் தலைவாசல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார் இந்நிலையில் அதிகாலை நரசிங்கபுரம் பகுதியில் வந்த போது சாலையோரம் நின்ற நபர் பேருந்து மீது கல்வி சி தாக்கியதில் கண்ணாடி உடைந்து உடனடியாக ஓட்டுநர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஆத்தூர் அருகே வளையமாதேவி பகுதி சேர்ந்த அருள் என்பது தெரிய வந்தது அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News