புயல் நிவாரண பொருட்கள்

குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-07 14:41 GMT

கசிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

சென்னையில் சில நாட்களாக புயல் மற்றும் தொடர் மழை காரணமாக, சென்னையில் அனைத்து பகுதி மக்களும் தங்கள் உடைமைகள் இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கு கூட இயலாத நிலையில் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.இது போன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள். குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் 13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 3 லட்சம் மதிப்பிலான வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் பிரபாகரன், வேலுமணி, மாதேஸ்வரன், சோமசுந்தரம், வடிவேலு, சீனிவாசன், அர்த்தநாரீஸ்வரர் உள்பட பலர் உடனிருந்தனர்.மாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. சென்னையில் சில நாட்களாக புயல் மற்றும் தொடர் மழை காரணமாக, சென்னையில் அனைத்து பகுதி மக்களும் தங்கள் உடைமைகள் இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கு கூட இயலாத நிலையில் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது போன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள். குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் 13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 3 லட்சம் மதிப்பிலான வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் பிரபாகரன், வேலுமணி, மாதேஸ்வரன், சோமசுந்தரம், வடிவேலு, சீனிவாசன், அர்த்தநாரீஸ்வரர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News