திருப்பூரில் திமுக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மின் கட்டடம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2024-06-13 08:13 GMT
மின்கட்டணம் உட்பட விலைவாசி உயர்வுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து  திருப்பூரில்  ஆர்ப்பாட்டம் !!  தொடர்சியாக மின் கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு,   வீட்டு வரி உயர்வு, விலைவாசி உயர்வு,  முத்திரைத்தாள் கட்டண உயர்வு என திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும்,  விலை உயர்வுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News