அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

மதுராந்தகம் நகரம் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பட்டில் நடைபெற்றது.

Update: 2024-02-17 09:35 GMT
அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரம் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தலைமைக் கழக பேச்சாளர் துகுலி நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கழக பேச்சாளர் பேசுகையில் திமுக ஆட்சியில் 520 வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் இதுவரை ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News