வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஏற்காட்டை ஆத்தூருடன் சேர்க்க உள்ளதாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-26 08:05 GMT

ஆட்சியர் கார்மேகம் 

கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஏற்காட்டை ஆத்தூருடன் சேர்க்கப்பட உள்ளதாக எந்தவித ஆதாரம் இன்றி தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்போ, அரசாணையோ எதுவும் வரவில்லை. இந்த நிலையில் யூகத்தின் அடிப்படையில் கற்பனையான ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News