பட்டாசு தீப்பொறி விழுந்ததில் கீற்று கொட்டகை எரிந்து சேதம்

Update: 2023-11-14 05:50 GMT

தீ விபத்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் குப்புசாமி நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மாடி வீட்டில் மேல் பகுதியில் கீற்று கொட்டகை போட்டிருந்தார். நேற்று மாலை கொட்டகையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விசாரணையில் அப்பகுதியில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
Tags:    

Similar News