சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பால் போராட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த சிறுவனுக்கு சரியான சிகிச்சை வழங்கவில்லை என உறவினர்கள் போராட்டம்

Update: 2024-06-12 08:00 GMT

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் உறவினர்கள் வாக்குவாதம் 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் டூ பழனி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாழைக்காய்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் நித்திஷ் என்ற இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்காததே சிறுவனின் மரணத்திற்கு காரணம் எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News