மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மேலாண்மை குழுவினர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-28 06:13 GMT

விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். பேரணியை ஊராட்சி துணைத்தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்கணும், எங்கள் பள்ளி எங்கள் பெருமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர். பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பொன்னாள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் சக்திவேல் முருகன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News