கல்வி கடன் முகாமில் மாணவி கோரிக்கை: ஆட்சியர் ஒப்புதல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் தனக்கு கல்விக்கடன் வழங்க வைத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.

Update: 2024-02-15 15:48 GMT

கோரிக்கை வைத்த மாணவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் அநேக மாணவர்கள் கல்விக்கடன் பெற்று செல்வதற்கு வந்திருந்தனர். அப்போது மயிலாடுதுறையை சோர்ந்த ஹேமா என்ற மாணவி, தான் கும்பகோணம் கல்லூரியில் படித்து வருவதாகவும், அவர் கல்விக்கடன் கேட்டு இந்தியன் வங்கியில் விண்ணப்பித்திருந்ததாகவும்,

அவர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகவும், கல்விக்கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,உடனடியாக இந்தியன் வங்கி நிர்வாகத்தை அழைத்து கல்வி கடனுக்கான உரிய பணிகளை மேற்கொண்டு அந்த மாணவிக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்,

அதை ஏற்றுக் கொண்டு ஹேமா என்ற மாணவிக்கு கல்விக்கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்து.

Tags:    

Similar News