கண்மாயில் மூழ்கி மாணவர் பலி : எட்டையபுரம் அருகே சோகம்

தூத்துக்குடி மாவட்டம், கீழஈரால் பகுதியில் கண்மாயில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-10 14:54 GMT

மாணவன் பலி

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்துகுமார் (18). இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அவர் மேல ஈரால் கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News