ஆண்டு விழாவில் அசத்திய ஆரியசேரி அரசு பள்ளி மாணவர்கள்

ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா.

Update: 2024-03-28 09:57 GMT

ஆண்டு விழா

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அங்கு சுற்றியுள்ள கீரனூர் பருத்திச்சேரி, செம்ங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் ரோல் மாடலாக அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர் நற்பண்புகளையும், கல்வி, விளையாட்டு என கற்பிக்கும் முறையில் அரசு பள்ளி குறைவில்லை என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது இந்நிலையில் ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடினர் முன்னதாக விழாவினை வருகை தந்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகலா வரவேற்புரை ஆற்றினார் நிகழ்விற்கு கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பால திரிபுரசுந்தரி தனசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சாரநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், மற்றும் நிவேதா வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியர் கோ அமுதா ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கான திறனறிவு போட்டி, கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நாடகம் உள்ளிட்டு முப்பெரும் நிகழ்ச்சிகளை சிறப்பாக மாணவர்கள் செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது நிறைவாக அரசு பள்ளிக்கு தொண்டுள்ளத்தோடு உதவிய புரவலர்களுக்கும் பள்ளி வளர்ச்சிக்கு உதவிய அனைத்து அரசியல் கட்சி மற்றும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிக்கான பரிசுப் பொருட்களை அனைத்தையும் கொடுத்து உதவிய ஆரியச்சேரி கீழத்தெரு, ஜீவா நகர்,கீரனூர் மணவெளித் தெரு நாட்டாண்மை கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் பள்ளி ஆசிரியர் மா கலைச் செல்வன் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News