மாணவிகளுக்கு இணைய வழி வினாடி வினா போட்டி

நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவிகள் இணைய வழி வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர்.

Update: 2024-06-26 15:06 GMT

நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவிகள் இணைய வழி வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர்.

இந்திய அரசின் தர நிர்ணயம் மற்றும் நுகர்வோர் நலன் - பிஐஎஸ் அமைப்பின் சார்பில் 'தரமானப்பொருட்கள்.... தரமான சேவைகள்' என்ற தலைப்பிலான இணைய வழி வினாடி வினா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளின் மாணவிகள் 55 பேரும், பேராசிரியர் பெருமக்கள் 2 பேரும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விடைகள் அளித்து பங்கேற்புச் சான்றிதழ்களை பெற்றனர். இதற்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் உட்பட அனைவரும் அவர்களை பாராட்டினர்.
Tags:    

Similar News