பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாணவர்கள்

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுத்து கொண்டனர்.

Update: 2024-02-24 02:01 GMT
சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாணவர்கள்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தென்காசியை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவோம் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் இராஜூ, ஆசிரியர்கள் மற்றும் சங்கரன்கோவில் வட்டார வானவில் மன்ற கருத்தாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News