சிறுதானிய திருவிழாவை பார்வையிட்ட மாணவ, மாணவியர்

கரூரில்,சிறுதானிய திருவிழாவை பார்வையிட்ட பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள்.

Update: 2023-11-29 11:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த சிறுதானிய திருவிழாவை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று நேரில் பார்வையிட்டு அங்கு பார்வைக்கு வைத்திருந்த சிறுதானிய உணவுகள் குறித்த குறிப்புகளை குறித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் சிறுதானிய தொழில்நுட்ப கையேட்டினை வழங்கினர். மேலும், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுதானிய உணவுகளை வரிசையாக சென்று பெற்று, உண்டு சுவைத்து மகிழ்ந்தனர். மேலும், சிறுதானியத்தின் மகத்துவம் குறித்து மாணவர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News