கல்வி சுற்றுலாவிற்கு திருச்சி சென்ற மாணாக்கர்கள்

விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு திருச்சிக்கு சென்ற மாணாக்கர்கள்.;

Update: 2024-02-19 15:37 GMT

சுற்றுலா சென்ற மாணாக்கர்கள்

விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு திருச்சிக்கு சென்ற மாணாக்கர்கள். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் செயல்பட்டு வரும் விதைகள் அறக்கட்டளை மூலமாக வயலூர், தேவசிங்கம்பட்டி, மேட்டுப்பட்டி வேங்காம்பட்டி மற்றும் தாளியாம்பட்டி ஆகிய கிராமத்தில் ஏழு மாலை நேர வகுப்பு மையங்கள் இந்த கல்வியாண்டில் Tata Solar Power நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்சமயம் மாணவர்களின் கல்வி சுற்றுலாவாக திருச்சி இரயில்வே அருங்காட்சியகம் மற்றும் முக்கொம்பு கதவனை சுற்றுலா பகுதிகளுக்கு வாகனம் மூலம் மாணாக்கர்களை இன்று அழைத்து சென்றனர். இந்த பயணத்தால் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது என பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு, இயக்குனர் ஜெயந்தி, அறக்கட்டளையின் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் மைய ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News