தருமபுரி ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 14:52 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., தலைமையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், இ.ஆ.ப., ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார்,
மாவட்ட ஆட்சியரின் நிர்வாக உதவியாளர் வளர்ச்சி வேடியப்பன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், நகராட்சி பொறியாளர் மகேஸ்வரி, அனைத்து மண்டலத் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.