தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்!

நாகையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-08 08:55 GMT

ஆய்வுக்கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் காவல் பார்வையாளர் சரணப்பா, தேர்தல் பொது பார்வையாளர் .பாரதி லக்பதி நாயக் , நாகை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் இன்று (08.04.2024) தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தேர்தல் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக நடக்கிறதா என தேர்தல் காவல் பார்வையாளர் சரணப்பா,மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஹர்ஷ் சிங், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News