கோணலூரில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு

கோணலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2024-01-20 16:39 GMT

ஆய்வு பணியில் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் கோணலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வேளானந்தல், அரும்பாக்கம்,பகுதியில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடை களில் தடை செய்யப்பட்ட புகையிலை சம்மந்தமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா மற்றும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா?

என்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News