விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்

சங்கராபுரம் அருகே பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-22 07:41 GMT

சாலை மறியல் 

சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அடையாளம் தெரியாத நபரால் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து நேற்று காலை கள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே கட்சியினர்  கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேனரை சேதப்படுத்திய நபரைக் கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்ததன்பேரில்,மறியல் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News