சித்தாமூர் பகுதிகளில் கோடை மழை துவக்கம்

சித்தாமூர் பகுதிகளில் கோடை மழை பெய்யத் துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-15 11:08 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கயப்பாக்கம், புத்தூர்,பெருக்கரனை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News