மக்கள் நீதி மய்யம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு சேர்கள் வழங்கப்பட்டன

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10 சேர்கள் மற்றும் ஆதரவற்றோர் மையத்துக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

Update: 2023-12-02 15:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலராக சரவணன் பணியாற்றி வந்தார். உடல்நலமில்லாமல் கடந்த ஆண்டு இறந்தார். இவரது நினைவுநாளையொட்டி மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு 10 சேர்கள் வழங்கப்பட்டன. தலைமை டாக்டர் பாரதி இதனை பெற்றுகொண்டார். தலைமை நர்ஸ்  சாந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சரவணன்  திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மல்லிகா, உஷா, செந்தில், நந்தகுமார், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், மோகன்ராஜ், உள்பட சரவணன் குடும்பத்தினர்  உடனிருந்தனர். .
Tags:    

Similar News