மறுவாழ்வு இல்லத்திற்கு போர்வை வழங்கல்

Update: 2023-12-01 19:25 GMT

மறுவாழ்வு இல்லம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உளுந்துார்பேட்டை தாலுகா வெள்ளையூர் அரசு மறுவாழ்வு  இல்லத்தில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளையொட்டி உணவு, போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி உணவு போர்வை வழங்கினார். மண்டலத் தலைவர் பழனி, மாநில இணை செயலாளர் முகமதுஅலி ஜின்னா,நிர்வாகிகள் இளவரசி, ஜெயப்பிரகாஷ், நாராயணமூர்த்தி, கோவிந்தராஜ், சுதா, ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News