போளூரில் இடைநின்ற மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கல்
போளூர் இருளர் காலணி குடியிருப்பில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களுக்கு பள்ளி சீருடை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 09:32 GMT
சீருடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட இருளர் காலணி குடியிருப்பில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.