அரசு சிறுபான்மையினர் மாணவியர் விடுதியில் ஆய்வு

அரசு சிறுபான்மையினர் மாணவியர் விடுதியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.;

Update: 2024-02-10 11:28 GMT
  • whatsapp icon
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மரியநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு சிறுபான்மையினர் மாணவியர் விடுதியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு செய்து மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, நகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா, துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News