சாலைகளின் தரம் குறித்து ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் 60வது வார்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-14 07:41 GMT

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் 60வது வார்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் 60-வது வார்டு கோவில் வழி பகுதியில் அருள் ஜோதி நகர் பகுதியில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் அதிகாரிகளுடன் நேரில் சென்று முழுமை அடைந்த தார் சாலை பணியின் தரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News