திமுக நிா்வாகி சென்ற காா் மீது வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை !

திமுக நிா்வாகி சென்ற காா் மீது வெடிகுண்டு வீசி, கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-01 05:36 GMT
செங்கல்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலராக இருந்தவா் ஆராமுதன் (50). வண்டலூரைச் சோ்ந்த இவா், நேற்று மாலை வண்டலூரில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தாா். வண்டலூா் மேம்பாலம் அருகே வந்த போது, இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள், அவா் சென்ற காா் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினா். மேலும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனா். இதில் ஆராமுதன் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, தாம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து தகவலறிந்த ஓட்டேரி போலீஸாா் விசாரணை நடத்தியதில், இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் அவா் மீது தாக்குதல் நடத்தி வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. முன்விரோதமா, ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்து காரணமா, அல்லது சொத்து பிரச்னையால் அவா் கொல்லப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News