அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-01-31 09:51 GMT

தமிழ்க்கூடல் விழா

திருக்கோவிலூா் அடுத்த நாயனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் தமிழ் மன்ற விழா இன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தி. சுகுணா தலைமை வகித்தார். திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சிங்கார உதியன், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் பேசினார். தமிழ் ஆசிரியர் செ. முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் கே. இயேசு ஜெயக்குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர். முன்னதாக மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News