தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம்

மானாமதுரையில் நடந்த எல்லோருக்கும் எல்லாம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டார்.

Update: 2024-03-03 02:38 GMT

அமைச்சர் பெரியகருப்பன் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் எல்லோருக்கும் எல்லாம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பேசினார்.

அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் சட்ட ஒழுங்கை காப்பாற்றினாரோ இல்லையோ தமிழக பாரதிய ஜனதா தலைவரா ஆன பிறகு சமூக விரோத காரியங்களில் ஈடுபட்டு முத்திரை பெற்ற குற்றவாளிகள் அனைவரையும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கின்ற வேலையில் செய்து கொண்டிருக்கிறார் என்றார் .மேலும் ஜனநாயகத்தின் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் ஈடி, வருமான வரித்துறை, போன்றவர்களை வைத்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கின்றனர். நெருக்கடி காலங்களை சந்தித்த இயக்கம் தான் திமுக என்றும், அழிப்போம், ஒழிப்போம் என்பதெல்லாம் அரசியல்வாதி, பல பொறுப்புகளை வகித்தவர் வாயில் இதெல்லாம் வரக்கூடாது.  இது மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இந்தியாவை அழைத்து செல்வதற்க்கு அர்த்தம் என்றார்.

Tags:    

Similar News