ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களில், நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டாக அணையிலிருந்து 30 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Update: 2024-03-11 01:31 GMT

நீர் திறப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களில், நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, விதமாக நாளை 11.03.2024 முதல் 15.04.2024 வரை 30 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில், ஆழியாறு அணையிலிருந்து 350.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி திருமண நிறுவனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News