திமுக வேட்பாளருக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் ஆதரவு

திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Update: 2024-04-11 10:08 GMT

திமுக வேட்பாளருக்கு ஆதரவு

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபததில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.நகர தலைவர் குணசீலன், ஒன்றிய துணைத் தலைவர் தங்கராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்த்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவிற்க்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்து உதய சூரியன் சின்னத்திற்க்கு வாக்கு சேகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து உறுதி செய்ய வேண்டும் மேற்கண்ட கோரிக்கைக்கு வாக்குறுதி தந்த திமுக வேட்பாளர் அருண் நேருக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாநில தலைவர் விஸ்வநாதன் கூறினார். கூட்டத்தில் லால்குடி ஒன்றிய அமைப்பாளர் சதாசிவம் வரவேற்று பேசினார். லால்குடி நகர துணை தலைவர் வரதராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News