தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 11:38 GMT
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் குழு உறுப்பினர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும் , மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மிக விரைவாக முடித்து, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் மேலும் அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.