ராமநாதபுரம் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் வைரவிழா ஆண்டின் சிறப்பு மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது

Update: 2023-12-14 01:15 GMT

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் வைரவிழா ஆண்டின் சிறப்பு மத்திய செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாநில நிர்வாகிகளை பரிவட்டம் அணிவித்து சிறப்பாக வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து கமுதி தாசில்தார் சேதுராமன் சங்கத்தின் வெற்றி கோஷம் முழக்கங்களை எழுப்பினார். அறுபதாவது ஆண்டை முன்னிட்டு 60 அடியில். கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு அமைத்து மாநிலத் தலைவர் கொடி ஏற்றப்பட்டு ஊர்வலமாக வந்தனர். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் சங்கத்தின் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துரைத்தார். சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர்கள் குமரேசன், மங்களபாண்டியன் செந்தூர்ராஜன், மணிகண்டன், அர்த்தனாரி, ராஜகோபால் மற்றும் மாநிலச் செயலாளர்கள் பார்த்திபன், சுப்பு ,அன்பழகன், தமிழரசன், செந்தில்குமார், ஜோஷி ஆகியோர் தீர்மானங்கள் முன்மொழிந்தனர். மாநில பொருளாளர் சோமசுந்தரம் நன்றியுரை வழங்கினார் மாவட்ட துணைத்தலைவர்கள் பரமசிவன்,முத்துராமலிங்கம் , மீனாட்சிசுந்தரம் ,மாவட்ட செயலாளர் ஜமால் முகம்மது ,மாவட்ட பொருளாளர் செல்லப்பா மாவட்ட இணைச்செயலாளர்கள் காசிநாததுரை , ஆண்டி , கோபாலகிருஷ்ணன் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி ,பெரியசாமி கீழக்கரை தனி வட்டாட்சியர் சேகு ஜலாலுதீன் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் தலைமை நில அளவர் சொக்கநாதன் வருவாய் ஆய்வாளர்கள் வேல்முருகன் சரவணன் பகவதி மற்றும் அனைத்து வட்டக்கிளை நிர்வாகிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News